சமிபத்துல பிரிட்டன் பல்கலைகழகம் ஒன்று நடத்திய ஆய்வின் அடிப்படையில் வெளியாகி உள்ள செய்தி இது .கிராமத்தில் வாழும் மக்களை விட நகரத்தில் வாழ்பவர்களுக்கு அதிகம் மனநிலை பாதிக்க படுகிறார்களாம்.நகரத்தில் நிலவும் கொலை கொள்ளை போன்ற பயம் காரணமாகவும் இயந்திர வாழ்க்கை முறையாலும் நாம் இந்த மாதிரி மன உளைச்சலுக்கு ஆளாகிறோம் என்கிறது அவர்கள் ஆய்வு. அதுவும் நகரத்தில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு ச்சிசாப்றேனியா (schizophrenia )என்னும் மனநோய் வர அதிகம் வாய்ப்பு உள்ளதாம் ...
born and brought up in city ன்னு இனி எவனாவது சொல்லுவானா ஹி ஹி
நம்ம ஊர்ல ஐ ஐ டி மாணவர்கள் எல்லாம் சேர்ந்து ஒரு வீடியோ கேம் உருவாக்கி இருக்காங்க ,கேம் பேரு லோக்பால் .இந்த விளையாட்டு லஞ்சத்தை கொடுப்பதும் வாங்குவதுமா இருக்குது இது யாரு லஞ்சம் கம்மியா வாங்குறாங்களோ அவங்க தான் வெற்றியாளர்கள் ...
இந்த விளையாட்டில் கூட நம்ம கவர்மென்ட் ஆபீசர்கள் வெற்றிபெற மாட்டாங்க என்ன சொல்லுறீங்க
ரம்பத்தால் அறுக்கும் சத்தம்,போர்டில் எழுதும் பொது சாக் பீசிளிருந்து எழும் சத்தம் போன்றைவை உங்களுக்கு அலர்ஜியா அதைவிட மிகவும் எரிச்சல் உண்டாக்கும் சத்தம் குழந்தையின் அழுகையாம்.இது பலரிடம் ஆய்வு செய்து வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கை ...இதற்க்கு சிலர் ஆய்வாளர்கள் மறுப்பும் சொல்லி உள்ளனர் .
சுகமான சுமை தானே
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சக்ராமென்டோ நகரைச் சேர்ந்தவர் காயாங்க் (29). இவரது குழந்தை அடம் பிடித்து அழுது சேட்டை செய்தது. இதனால் எரிச்சல் அடைந்த காயாங்க், குழந்தையை அடித்து உதைத்தார். பலமாக தாக்கியதால் குழந்தை இறந்தது.
மேலே சொன்ன ஆய்வு உண்மை தாங்கோ ...இப்படியும் சிலர்
லண்டனில் சென்ற வருடம் சிறந்த மருத்துவர் என்ற பதக்கம் வென்ற ஒரு மருத்துவர்,தான் செய்த அறுவை சிகிச்சையில் நடந்த தவறுக்கு வருந்தி தற்கொலை செய்துகொண்டார் .அந்த நோயாளியின் நிலைமை கவலைக்கிடமாகவே உள்ளது ...
இங்க பாருடா !!ஊழல் செய்யும் அரசியல்வாதிகளுக்கு கொப்பளம் வந்தாலே சிலர் துடி துடி ன்னு துடிகிறாங்க தவறுக்கு எங்க வருந்துறாங்க இங்க
ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டு திகார் சிறையிலுள்ள திமுக எம்பி கனிமொழி, அங்கு மெழுகுவர்த்தி செய்யக் கற்றுக் கொள்வதாக சிறை வட்டாரங்கள் தெரிவித்தன.
தந்தையின் உருக்கத்தை சிம்பால்லிக்கா உணர்கிறாரோ
இப்படி உழைத்த காசுதாம்மா நிலைக்கும்
1983 க்கு அப்புறம் ஜேம்ஸ் பாண்டு திரைப்படம் இந்தியாவில் படமாக்க பட இருக்கிறது. மும்பையில் ஷூட்டிங் செய்வதற்கானஆயத்த பணிகள் ஆரம்பம் ..
அட !!!இந்தியாவை கொஞ்சம் அழகா காட்டுங்க பாஸ்