10.30.2013

தாய் தந்தை மகள்


தந்தை 


கலவிக்கு பின் கருவாகி 
கருவறையில் சிசுவாகி 
மகளாக பிறந்ததும் 
எப்படி தாயானாய் !





தாய் 


கணிக்க முடியாத இறைவனின் அன்பை 
நினைத்து போற்ற தாய்மை தந்தவளிடம் 
என்னவரின் முத்தங்களை குத்தகைக்கு 
கொடுத்ததில் பொறாமை துளியும் இல்லை !






மகள் 


திணிக்கப்பட்ட தாய்பால் நிறுத்தியதும் 
மனதில் பதிந்தது முதல்ஏக்கம்,
இதை சொல்லவோ பாடவோ 
இன்னும் தமிழ் உதவவில்லை !
அதற்குள் என் ஏக்கம் மறந்தும் மறத்தும் 
போய்விடும் -அதுவரை உங்கள் 
தவறுகளுக்கும் சரிகளுக்கும் மத்தியில் 
சிறகடித்துக்கொண்டு இருக்கிறேன் !
சந்திக்க போகும் ஏக்கங்கள் என் 
சிறகுகள் அனைத்தையும் ஓடிக்கும்வரை !

முற்றும் -------------------------

நன்றி ... இதுவும் மீள் பதிவு . 

8 comments:

  1. இதை விட சிறப்பு ஏது...? அருமை... பாராட்டுக்கள்....

    தொடர வாழ்த்துக்கள்...

    தமிழ்மணம் இணைத்து ஓட்டும் இட்டு விட்டேன்... நன்றி...

    ReplyDelete
  2. சந்திக்க போகும் ஏக்கங்கள் என்
    சிறகுகள் அனைத்தையும் ஓடிக்கும்வரை
    >>
    பெண்ணாய் பிறந்தன் பலன்

    ReplyDelete
    Replies
    1. இது எனக்கும் பிடித்த வரி சகோ . அதை சொல்லி பாராட்டியது மகிழ்ச்சி . நன்றி நன்றி

      Delete
  3. அருமை....


    மேலும் தங்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ .. தீபாவளி பலகாரம் கிடைக்குமா ??? உங்களுக்கும் வாழ்த்துக்கள்

      Delete
  4. //திணிக்கப்பட்ட தாய்பால் நிறுத்தியதும் மனதில் பதிந்தது முதல்ஏக்கம்,
    இதை சொல்லவோ பாடவோ இன்னும் தமிழ் உதவவில்லை !//

    அருமையான வரிகளுடன் அழகிய ஆக்கம். பாராட்டுக்கள்.

    ReplyDelete
    Replies
    1. அன்பு ஐயா ,
      சென்ற முறையும் இந்த வரிகளை குறிபிட்டு பலர் பாராட்டினார்கள் . இந்த முறை அது உங்களை மனதை கொள்ளை கொண்டதில் மகிழ்ச்சி . நன்றி நன்றி

      Delete