1.23.2013

ஆஸ்காருக்கு பின் ஆசையாய்......



வாழ்கையை ..........
வாழ்ந்து விடு ....
வழி பிறக்கும் என்றே 
வாழ்ந்து விடு .....


வாழ்கையை ..........
வாழ்ந்து விடு ....
இருளும் விலகும் ஓர் நாள் 
வாழ்ந்து விடு ....
தொலைவில் அல்ல 
தொடும் தூரம் 
என்றெண்ணி வாழ்ந்திடு 
ஏணி எதற்கு 
ஏக்கம்  எதற்கு 
கண்ணில் வெளிச்சம் இருக்கு 
உன் கனவில்'
புதிர் இருக்கு விடையும் இருக்கு 
விழித்து பார்த்தால் 
விடை அறிந்தால் 
உனதே உனதே வெற்றி 
துணிந்து செல் ........
துணிந்தே செல் 
துணை யாரும் வேண்டாம் துணிவே தோழனென்று 

துணிந்து செல் ........
துணிந்தே செல் 

துணிந்தே செல் 
துணை யாரும் வேண்டாம் துணிவே தோழனென்று .......



--------------------------------------------------
ஆஸ்காருக்கு பின் ரஹ்மான் ஆசையாய் இசையமைத்த படம் டெல்லி-6 அதில் இடம் பெற்ற பாடல் இது ...இதை தமிழில் கேக்க ஆவல் பாடி பாருங்கள் ..

5 comments:

  1. நல்லாருக்கு நண்பரே!இன்னைக்குதான் உங்களுடைய பக்கத்திற்கு முதல் முறையாக வந்திருக்கிறேன், பின்தொடர்கிறேன், நிறைய எழுதுங்க படித்து ரசிக்க காத்திருக்கேன்.

    ReplyDelete
  2. உங்கள் முதல் வருகை மகிழ்ச்சி தருது நண்பா ! ரொம்ப நன்றி ... மீண்டும் மீண்டும் வாங்க .............

    ReplyDelete
  3. தமிழில் தாங்கள் எழுதியுள்ள பாடல் வரிகள் மிகவும் அழகாக அமைந்துள்ளன.

    ஒவ்வொரு வரியும் தன்னம்பிக்கை அளிப்பதாகவே உள்ளன.

    //உன் கனவில்
    புதிர் இருக்கு விடையும் இருக்கு
    விழித்து பார்த்தால்
    விடை அறிந்தால்
    உனதே உனதே வெற்றி

    துணிந்து செல் ........
    துணிந்தே செல்
    துணை யாரும் வேண்டாம் துணிவே தோழனென்று // ;)))))

    பாராட்டுக்கள், வாழ்த்துகள். பகிர்வுக்கும் தகவலுக்கும் நன்றியோ நன்றிகள்.


    ReplyDelete
    Replies
    1. அன்புள்ள ஐயா ...
      நலமா ...நான் நலம் ...! மிக்க நன்றி ஐயா ...முழு பாடல் எழுத முயற்சி செய்தேன் ! இது மிக பெரியாஆஆஆஆஅ பாட்டு ராகத்தோடு வார்த்தை கோர்ப்பது சிரமம் ஆனதால் பல்லவியுடன் முடித்து கொண்டேன் ! அது உங்கள் கண்ணில் பட்டதும் ஆனந்தம் வருது .நன்றி நன்றி ..........

      Delete
  4. துணிந்தே செல்
    துணை யாரும் வேண்டாம் துணிவே தோழனென்று .......//

    துணிவே துணை.
    கவிதை அருமை.

    ReplyDelete