அலங்காரம் அதிகமானால்
விலை வைத்துவிடுகிறார்கள்
அலங்காரமே இல்லை என்றால்
விலைபோவதில்லை நான்!
வியர்வை துடைத்து,அளவாய் சிரித்து
ஆண்களை எதிர்கொள்ளும் போதெல்லாம்
என் ஐம்புலனும் தன்னிச்சையாய்
உடையை சரிசெய்து கொள்ள பழகிவிட்டது
நிச்சயமாய் கவனம் ஈர்ப்பதற்கு அல்ல!
பெண்ணியம் பேசும் பல
கண்ணியவான்கள் கண்கள் கூட
மத்தியில் நிலைத்து விடுகிறது .
தடுமாறும் வக்கிரத்தால்
நான் தடம் மாறாமல் இருக்க உதவும்
தலையங்கி,துப்பட்டா மட்டுமல்ல
ரசம் போன கண்ணாடிகள் கூட
எங்களுக்கு இறைவன் தந்த பொக்கிஷமே !
Tweet |
நல்லாத்தான் இருக்கு
ReplyDeleteநன்றி சகோ
Deleteமிகவும் அழகான அற்புதமான படைப்பு.
ReplyDelete//என் ஐம்புலனும் தன்னிச்சையாய்
உடையை சரிசெய்து கொள்ள பழகிவிட்டது//
பாராட்டுக்கள். வாழ்த்துகள்.
இதுபோல சிறப்பாக படைக்கும் ஆற்றல் தங்களுக்கும்
// இறைவன் தந்த பொக்கிஷமே !// ;)))))
அன்புடன்
vgk
நீங்கள் படித்ததே பெருமை ஐயா! நன்றி நன்றி
Deleteபெண்ணியம் பேசும் பல
ReplyDeleteகண்ணியவான்கள் கண்கள் கூட
மத்தியில் நிலைத்து விடுகிறது .
தடுமாறும் வக்கிரத்தால்
நான் தடம் மாறாமல் இருக்க உதவும்
தலையங்கி,துப்பட்டா மட்டுமல்ல
ரசம் போன கண்ணாடிகள் கூட
எங்களுக்கு இறைவன் தந்த பொக்கிஷமே //
நிச்சயமாக பொக்கிஷங்கள்தான்
அருமையான சிந்தனை
அருமையான பதிவு
தொடர வாழ்த்துக்கள்!
tha.ma 3
ReplyDeleteவாக்கிற்கு சிறப்பு நன்றிகள்
DeleteUnmai varikal
ReplyDeleteநன்றி சகோ ...அடிக்கடி வாங்க
Delete/* பெண்ணியம் பேசும் பல
ReplyDeleteகண்ணியவான்கள் கண்கள் கூட
மத்தியில் நிலைத்து விடுகிறது . */
உண்மை..உண்மை..உண்மை....
எவ்வளவு மறுத்தாலும் இது உண்மை..உண்மை..உண்மை...
சகோ மிக்க நன்றி
Deleteகவி நடையில்
ReplyDeleteநர்த்தனமாடுகிறது
வலி சொல்லும்
வலிமையான வார்த்தைகள்
வாழ்த்துக்கள் சகோ
நன்றி சகோ மிக்க நன்றி
Deleteஅடிக்கடி வாங்க சகோ