12.09.2012

மணிரத்னத்தின் கடல் பாடல் -ஏலே கீச்சான்


பல்லவி 
--------------
எலே கீச்சான் ...
ஏலே கீச்சான் 
அப்பன் பாட்டன் சாதிச்சான் 
முன்னேற முத்தெடுக்க 
முடிவெடு கீச்சான் !
முக்காடு முழுசா தொறந்தாச்சு
முடிசூடும் வேளை வந்தாச்சு !

கோரஸ் :

வலைவிரிக்கிரோம் வலைவிரிக்கிறோம் கடலம்மா 
மீன் விழுந்தால் அறை வயுறு !
வலை அறுந்தால் கால் வயுறு !


சரணம் 1:

கடலும் அன்னை 
மண்ணும் அன்னை 
வானம் தானே தந்தை தந்தை !

மண் காற்றை கொண்டு புயலை அனுப்ப 
கடல் பொங்கி எழுந்து சுனாமி அனுப்ப 
அட தீராத சக்களத்தி சண்ட சண்ட 
வானம் மழை தந்து சமாதானம் செய்ய செய்ய 
ஏறி இறங்கி எங்க பொழப்பு 
காணப்போச்சு எங்க ஓடத்தின் துடுப்பு !


கோரஸ் :

கண்ணீரும் உப்பு 
கடல் நீரும் உப்பு 
கடலுக்கு சோகம் புரிய 
ஏதையா வாய்ப்பு !

                                                        (எலே கீச்சான் ...)
சரணம் 2 :

மீனுக்கும் அரசியல் தெரியும் போல 
எல்லை தாண்டி ஒளிஞ்சுக்குது  !
எல்லை தாண்டி நாங்க போனா 
சூடுபட்டு வாறோம் தோழா தோழா 
இது சமுத்திரத்தின் ரத்தசரித்திரம் 
கடலில் எங்கள் ரத்தம் 
கலப்பது தாங்க தரித்திரம்!

முடியும் என்றே முயற்சிகள் செய்கிறோம் 
விடியும் என்றே நம்பிக்கை கொண்டோம் !
                                                  
கோரஸ் :

கண்ணீரும் உப்பு 
கடல் நீரும் உப்பு 
கடலுக்கு சோகம் புரிய 
ஏதையா  வாய்ப்பு  !
                                                 (எலே கீச்சான் ...)
----------------------------------------------------------------------------------------------

பாடல் வெளியாகுரதுக்கு முன்னாடி இந்த பாட்டு இப்படி இருக்குமோ என்ற என் எதிர்பார்ப்பு ....ஹி ஹி 

பல்லவி இது நாயகனின் அறிமுக பாடலாக இருக்கும் என்ற நினைப்பிலும் ,
முதல் சரணதில் கடல் வாழ் மக்கள் சந்திக்கும் இயற்க்கை சீற்றங்களையும் ,இரண்டாம் சரணத்தில் இன்றைய வேதனைகளையும் 
சொல்லி பார்த்தேன் !

SORRY MR. MADAN KARKY ..



ஆனா மதன் கார்க்கியும் ரஹ்மானும் சேர்ந்து கொடுத்து இருக்கும் அருமையான பாடல் இங்கே இருக்கு கேட்டு பாருங்க ...


No comments:

Post a Comment