12.13.2012

விஸ்வரூபம் விஷபரிட்சையே !


பழக்கம் இல்லாத சப்தம் ,திடுக்கிட்டு திரும்பினால்
பீதியில் அலறி ஓடும்  மக்கள் ஒருப்பக்கம்
குருதிபுனலில் கதறும் மக்கள் ஒருப்பக்கம்
இல்லாத வீரத்தை தேடாமல்
இருக்கின்ற ஈரத்தினால் கதருவோருக்கு
உதவ நாடியது மனம் !


இது மனிதகூட்டத்தின் எரிமலை கோபம்
இயலாமையால் இன்று வெடித்துள்ளது
இன்னும் வெடிக்கும் என்ற அச்சத்தால்  பல
தோழமை கைகள் தடுக்கின்றன உதவிடும் என்னை !

அங்கே ரத்த வெள்ளத்தில் மிதப்பதும் நண்பர்களே

பாதுகாப்பு வளையம் தாண்டி செல்லும் போது 
கண்டகாட்சிகள் பலவற்றை கண்ணீர்
 மறைத்துவிட்டதால் கண்ணீருக்கு நன்றி! 
எஞ்சிய  சில மனக்கண்ணில் நிலைத்ததே சாபம்!

பால்வாங்க வந்த பெரியவர்,

பால்குடி மறக்காத குழந்தை, 
தாயின் அணைப்பில் இருந்ததற்கு 
சாட்சியாய் தாயின் கைமட்டும் 
குழந்தையோடு இருக்க -தாய் 
எங்கோ சின்னாபின்னமாகி! 
அனைவருக்கும் பால் ஊற்ற கூட 
பிரோயோஜன படாததால்  பால் பாக்கெட்டும்
உயிரிழந்து கொண்டிருக்கு!

இன்னும் உயிர் உள்ளவர்களுக்கு உதவிட

அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு நான்
சிவப்பு விளக்குகளுடன் அம்புலன்சுகள்
சீறி பாயுந்து சென்றதும் வீதியில்
பிணமானவர்களும் உதவியவர்களும்
மட்டுமே இருக்கிறோம் !

ஜாதி மத பேதங்கள் தொலைந்து
ஒற்றுமையாக பிணக்குவிலாக மனிதர்கள்
வழிந்து ஓடும் குருதிப்புனலில்
குருதி பேதமும் தொலைத்திருந்தது!


நடக்கையில் எறும்புகளை மிதித்து
கொன்ற அனுபவங்கள் அனைவருக்கும் உண்டு .
இது எறும்புகளின் கோவமோ ?!
புத்தனுக்கும் கோபம் வரும்
காலம் இது -என் சந்தேகத்தில் பிழையில்லை !

சமர்பிக்க சொல்லும் இறைவனிடம்
சமர்ப்பித்து இருந்தால் சங்கடங்கள் தீரும்!
பொறுமையின்றி உயிரெடுத்து கொன்றுகுவித்து
யாருக்கு நீதியை நிலைநாட்ட போகிறார்கள்
இந்த ஆத்திரக்காரர்கள் -கோபத்தின்
 விஸ்வரூபம் விஷபரிட்சையே !

என் கருப்பு சட்டையிலும் செங்குருதி
திட்டு திட்டாய் தெரிவதை பார்த்து நொந்த
அதே கணம் மீண்டும் ,
அதே சப்தம் கேட்டது.-இந்த முறை
எனக்கு உதவிட அழைக்க யாருமில்லை !


தீப்பிடித்து எறியும் சட்டையையும்
அணைக்க வலுவில்லாமல் நான் !
ஐயோ சற்றுமுன்  காலிழந்த ஆடவனின் 
முகம் போல் என் முகமும் 
சிதைந்திருக்குமோ -எங்கே வலிக்கிறது 
கூறிப்பிட்டு சொல்ல வலுவின்றி 
மயக்க நிலைக்கு செல்கிறேன்!
மிருகங்களுக்கு நடுவில் மனிதனாக
இருக்கத்தானே முயற்சிதேன் எனக்கேன்
இந்த தண்டனை இறைவா ?

இல்லை!சரியே !கண்ட காட்சிகள்
சாபம் என்றேன் சாகும் வரம் தந்துவிட்டாய்
நன்றிகள் கோடி பரம்பொருளே !
வலிதான் பொறுக்க முடியவில்லை
சீக்கிரம் முற்றுப்புள்ளி வை
எனக்கும், நடக்கும் அத்தனை போருக்கும் !

4 comments:


  1. ஜாதி மத பேதங்கள் தொலைந்து
    ஒற்றுமையாக பிணக்குவிலாக மனிதர்கள்
    வழிந்து ஓடும் குருதிப்புனலில்
    குருதி பேதமும் தொலைத்திருந்தது!/

    /மிகச் சரியாகச் சொன்னீர்கள்
    வாழுகையில் இல்லாத ஒற்றுமை
    இதுபோன்ற அசம்பாவிதங்களில்தான் நேராகிறது
    சிந்திக்கத் தூண்டும் பதிவு
    தொடர வாழ்த்துக்கள்


    ReplyDelete
    Replies
    1. நீண்ட இடைவெளிக்கு பின் வந்து இருக்கீங்க ஐயா ..நன்றி

      Delete