12.27.2012

40 தொகுதிகளிலும் ஜெயிக்க கிடைத்த விதை -ஜெ

இன்று டெல்லியில் நடைபெற்ற  தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. அதில் தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா அவர்களும் கலந்து கொண்டார். அங்கு அணைத்து முதல்வர்களுக்கும் பத்து நிமிடமே பேச அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் தமிழகத்தின் இப்போதைய பிரச்சனைகளை பத்து நிமிடத்தில் யாராலும் சொல்ல முடியாது மணிகணக்கில் வேண்டும்.நிற்க  இது தான் சாக்கு என்று பத்து நிமிட பேச்சை பஸ்ஸர் அழுத்தி நிறுத்திய கோபத்தால் தன்னை அவமான படுத்திவிட்டதாக ஆவேசப்பட்டு வெளியேறி ,ஜெ தனது அரசியல் இருப்பை(கடுப்பை) மீண்டும் நிலைநிறுத்தி உள்ளார்.

இதனால் தமிழகதிற்கு என்ன நன்மை ! ஆனா முதல்வரின் இந்த ஸ்டன்ட் இன்ஸ்டன்ட் ஹிட் பாருங்க நம்ம கலைஞர் ஐயாவே "ஜெயலலிதாவை அவமதித்திருந்தால் கண்டிக்கத்தக்கது "என்று சொல்லிவிட்டார். இதுவே வர இருக்கும் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்களிலும் முதலிடம் பிடிக்கலாம்.தமிழக பிரச்சனைகளுக்கு குரல் கொடுக்க எங்களை 40 தொகுதியிலும் வெற்றி பெற வைத்தால் தமிழகத்தின் துயர் துடைப்போம் என்ற வாக்குறுதிகள் அனல் பறக்கும் மேலும் இலவசங்கள் என அடுக்கினால் ஜெவின் பிரதமர் கனவு பலித்தாலும் பலிக்கும் .....

விதை நான் போட்டது ...................ஹி ஹி.... எனக்கு அரசியல் அவ்வளவா தெரியாது இந்த செய்திகளை படித்ததும் டக்குனு தோனுச்சு ............



2 comments:

  1. விதை சிறியதாயினும் வீரியமிக்கதுதான்
    நிச்சயம் தேர்தலுக்கு உதவும்
    சுவாரஸ்யமான பதிவு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete