7.26.2011

ரஞ்சிதா வாழ்க்கையில் விளகேற்றிய நக்கீரனும் சன் டிவியும்

இங்கே கண்டிப்பாக போலி சாமியார்கள் மட்டுமே அனுமதி.நீங்க சீரியஸ் ஆளாக இருந்த இங்கயே இப்படியே ஆப்பிட்டு ஆயிடுங்க ..சும்மா சிரிக்க கொஞ்சம் சிந்திக்க மேலே படிங்க ....

போலி சாமியார் சந்திக்கும் சவால்கள்.

குரு: இன்றைய உரை பற்றிய   போர்டு மாட்ட சொன்னேனே ..மாட்டியாச்சா?

சிஷ்யன் : போலி சாமியார் சந்திக்கும் சவால்கள். அப்படின்னு போட்டிருகேன்னு சாமி .

குரு:மடையா இப்படி பகிரங்கமாவா போடுவாய் ! நாதாரித்தனம் பண்ணினாலும் நாசூக்கா , நம்ம ஆளுங்களுக்கு மட்டும் புரியுற மாதிரி எழுதணும்.ரொம்ப நல்லவங்க நிறைய பேர் இருக்காங்க அவங்க கோவிசுக்கவும் கூடாது ..கவனம் தேவை ..கவனக்குறைவு தான் நம்ம பண்ணுற மிக பெரிய தவறு ...

சிஷ்யன் : மிடில் கிளாஸ் மக்களை குறி வைத்து தானே நம்ம உரைகள் இருக்கும் இன்னைக்கு  என்ன  டார்கெட் வேற  மாதிரி இருக்கு 

குரு : இந்த போலிகள் எல்லாம் நம்மள ஓவர்டகே பண்ணி போயி ஆயிரம் கோடி மூவாயிரம் கோடி அப்படீனு சேர்த்துபுட்டு எப்படியோ மாட்டிகிராணுக  
அவனுங்க  தான் இப்ப நமக்கு அடிமைகள் பணம் காய்க்கும் மரங்கள். பயத்தில இருக்கும் போது முடிந்தவரை புடிங்கிடலாம்... இலவச இணைப்பா நடிகைகள் கூட கிடைக்க வாய்பிருக்கு

சிஷ்யன் : அட நல்ல திட்டம் தான் குருவே ..புதுசா ஒருத்தன் சாமியாராக வந்து இருக்கான்...காலையில இருந்து உங்களை பாக்கணும்ன்னு ஒரே அடம் பண்ணுறான்..

குரு:வரசொல் ..
ஜெயம் உண்டாக்கட்டும் ....மாயை உன் கண்களை மறைத்து இருந்தது!! உன்னை இன்று முதல் சமாதி மோட்சம் கிடைக்க போகுது ...வா மகனே வா ..உன் பெயர் என்ன

புதியவர் : ராஜசேகர்

குரு:இந்த பேரு வச்சாலே சாமியார் ஆக தோணுமோ..நீ ஏன் சாமியார் ஆக ஆசை படுகிறாய்

புதியவர் :சாமி எனக்கு ரெண்டு பொண்டாட்டி ..சமாளிக்க முடியல ..வாழ்க்கை வெறுத்து போச்சு காசி ராமேஸ்வரம் போகலாம்ன்னு நினைத்தேன் ..இப்போ பேப்பர் டிவி எல்லாம் பார்த்து இங்கே வந்து சேர்ந்தேன் ..

குரு: ரெண்டு பொண்டாட்டியை சமாளிக்க முடியாத நீ சாமியாராக முடியாது என்றே தோணுது ...உனக்கு யோகா தெரியுமா ?

புதியவர் :ஐயா பணக் கஷ்டம் அதுதான் சமாளிக்க முடியலை ..கோடிகள் புரளும் பொது நாங்களும் நித்தம் நித்தம் கலக்குவோம் ...யோகவெல்லாம் நமக்கு உடம்பு வளையாது சாமி ..

குரு:ஒரு முடிவோடு தான் வந்து இருக்கே ஜெயம் உண்டாகட்டும் ...சரி இன்றைய உரையை நீ வந்து கவனமா கேட்டு குறிப்புகள் எடுத்துக்கோ ...உனக்கு தேவையான அணைத்து உதவிகளும் செய்யப்படும் ...பயிற்சி முடிந்து
நீ சொந்தமா மடம் தொடங்கி பிசினெஸ் செய்யும் பொது இருபது சதவீதம் எனக்கு தந்து விடனும் ....சரியா ...கிழே ஆக்ரேமென்ட் ரெடியா இருக்கும் போயி சைன் பண்ணு ...ஜெயம் உண்டாக்கட்டும் ...

அன்றைய உரைக்கான டிஸ்கசன் தொடங்கியது 


சிஷ்யன் :  சக கூட்டாளிகள் எல்லாம் வராங்க இவங்க கிட்ட பேச மிக பெரிய ஞானம் தேவை ...

குரு: ஒரு மண்ணும் தேவை இல்லை வரவன் எல்லாம் கொலை,கற்பழிப்பு சொத்து குவிப்பு என்ற தில்லாலங்கடி வேலை செய்தவன் தான்...முன்கூட்டியே   நான் எல்லோறுக்கும் உன்னை பற்றிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளதுன்னு ஒரு மிரட்டல் ஈமெயில் அனுப்பிவிட்டேன் ...

சிஷ்யன் : குருவே மார்க்கெட் இழந்த மலை தொடர் வே நடிகை வந்து இருக்காங்க ..

குரு:ஹி ஹி ..வர சொல்லு

நடிகை : இன்றைக்கு பேசுவதற்கு நீங்க கேட்ட குறிப்புகள் எல்லாம் இன்டர்நெட்டில் தேடி கொண்டுவந்தேன் இதோ ... எல்லாம் மணிரத்தினம் பட டயலாக் மாதிரி சின்னதா நச்சுன்னு இருக்கும் ...நடுவுல நீங்க உங்க சாமியார் எபக்ட் சேர்த்துக்க மகனே ,குழந்தாய் இறைவன் ஜெயம் சர்வம் சந்தோசம்  அப்படின்னு கொஞ்சம் சேர்த்துக்கோங்க

குரு: குணா பட கமல் மாதிரி சொல்றியே கள்ளி ...

சிஷ்யன் : பணக்கார பக்க்தர்களுக்கு பினாமியா இருக்குறதை முதல்ல நிறுத்தனும் ...

குரு:அவங்க தான் நமக்கு விளம்பரமே ஆனா வில்லங்கம் வராம இருக்க அவங்க பிடி நம்ம கிட்ட இருக்கணும் நம்மளும் பேராசை படாம இருக்கணும் .

நடிகை : சினிமாகாரி கிட்ட ஜாக்கிரதையா இருக்கணும்

குரு:அது உண்மை தான் சபலத்தில் ரஞ்சிதா விடம் நித்தி மாட்டிகிட்ட மாதிரி இனி யாரும் மாட்ட கூடாது ...மார்கெட் இழந்த ரஞ்சிதா இன்று சினிமாவில் சம்பாதித்ததை விட அதிகம் சம்பாதித்து விட்டதாக கேள்வி ..பிளான் பண்ணி எவிடேன்சே இல்லாமல் பார்த்துக்கணும் ...

சிஷ்யன் : அரசியல்வாதிகள்

குரு:அவங்க பிடி நம்மகிட்ட இருக்கணும் கொஞ்சம் ஸ்லிப் ஆனோம் கொலை பலி கூட விழும் ..

சிஷ்யன் : சரி சரி ஒருமணி நேர உரை தயார் ....

குரு:போலி சாமியார்கள் சந்திக்கும் பிரச்சனைகள்  எல்லாம் இதில் வந்துவிட்டதல்லவா ....

நடிகை : பத்திரிக்கைகள்

குரு:அவங்க உங்க பின்னாடி தான் அதிகம் சுத்துவாங்க ..நானா போயி வெறும் வாயில் அவுல் கொடுத்து மாட்டிகிட்டா தான் வம்பே .....

சிஷ்யன் : நன்றி குரு நான் சென்று வருகிறேன்

குரு:டே எங்கடா

சிஷ்யன் : மெக்ஸிகோ நாட்டில் ஒரு அக்கௌன்ட் திறந்தாச்சு , ஆந்திராவுல
நாளை நான் கட்டிய கோவிலை வைத்து நான் இனி பிழைத்து கொள்வேன்
வரட்டா ...

குரு: இருபது சதவிதம் எனக்கு மறந்துடாதே ..

சிஷ்யன் : சாமி உங்க பிடி இப்ப  என் கையுல

குரு:அட பாவி

சிஷ்யன்   நடிகையுடன் வெளியேறினான் ...........



15 comments:

  1. கலக்கிடிங்க நண்பாஉண்மையைதான் கற்பனைப் போல் சொல்லி உள்ளிர்கள். அருமையான பதிவு

    ReplyDelete
  2. பாஸ் உங்களுக்கு சாமியாராகுற ஐடியா இருக்கா? இருந்தா சொல்லுங்க நான் சிஷ்யன் ஆகிடுறன்... ஹி ஹி

    ஈழத்தமிழர் விடயத்தில் விஜய் செய்தது தவறா?

    ReplyDelete
  3. சிட்டுவேசன் தலைப்போடு, சிக்கலான சாமியாரின் மேட்டர்களைப் புட்டு வைச்சிருக்கிறீங்க.

    பாஸ், நீங்க சாமி என்றால், உங்களுக்கு அஸிஸ்டெண்டா நான் வரவா பாஸ்.

    ReplyDelete
  4. ரஹீம் கஸாலி said...
    ok
    @@@@@@@@@
    tq

    ReplyDelete
  5. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    present.,
    @@@@
    tq

    ReplyDelete
  6. ஆமினா said...
    :)
    @@@@
    tq

    ReplyDelete
  7. "என் ராஜபாட்டை"- ராஜா said...
    Ha . . Ha . . Ha
    @@@
    tq tq tq...

    ReplyDelete
  8. சென்னை பித்தன் said...
    வணக்கம் குருவே!
    @@@@
    ஐயா நீங்க ஒரிஜினல் நான் டூபாக்கூர்

    ReplyDelete
  9. A.R.ராஜகோபாலன் said...
    கலக்கிடிங்க நண்பாஉண்மையைதான் கற்பனைப் போல் சொல்லி உள்ளிர்கள். அருமையான பதிவு
    @@@@
    நன்றி நண்பா

    ReplyDelete
  10. மதுரன் said...
    பாஸ் உங்களுக்கு சாமியாராகுற ஐடியா இருக்கா? இருந்தா சொல்லுங்க நான் சிஷ்யன் ஆகிடுறன்... ஹி ஹி
    @@@
    நண்பா ஏன் இந்த வம்பு நமக்கு ....சரி கம்மேண்டில் எப்படி லிங்க் கொடுக்குறீங்க

    ReplyDelete
  11. சிட்டுவேசன் தலைப்போடு, சிக்கலான சாமியாரின் மேட்டர்களைப் புட்டு வைச்சிருக்கிறீங்க.

    பாஸ், நீங்க சாமி என்றால், உங்களுக்கு அஸிஸ்டெண்டா நான் வரவா பாஸ்.
    @@@
    நீங்க தான் என் மானசீக குரு...என்ன ஒரு தன்னட்ட்கம் உங்களுக்கு அதனால தான் நீங்க குரு ..

    ReplyDelete