7.28.2011

பதிவுலகில் நுனிபுல்லின் கீபோர்டும்???

கடை வீதியில் -உன்
கடை கண் பார்வைக்கு -இந்தியாவின்
கடன் தீர்க்க பல 
கோடிஸ்வரர்கள்  தயார் !

வரி ஏய்ப்பு செய்யும் 
வல்லுனர்கள் கூட -உன் 
வடிவிற்கு கேள்வியே  கேட்க்காமல் 
வாரி இறைக்க துணிந்தனர் !

சூது வாது இல்லாமல் -நீ 
சாலையில் போகையில் 
உன் பார்வை யாரை கடந்தது என்று 
சூதாட்டமே நடக்குதடி !

மழைக்கும் உன் மீது காதல் 
வெயிலுக்கும் உன் மீது காதல் 
உன்னால் உன் ஊரே இதமான 
தட்ப வெப்பத்தில் குளிர்காயுதடி!

இத்துன்னை பெருமைகளையும் 
வாசலில்  செருப்போடு கழட்டி வைத்துவிட்டு  
கண்ணாடியில் அன்று புதிதாய் 
திருஷ்டியாய்  அரும்பியுள்ள பருவை  பார்த்து 
வேதனையில்  என் கற்பனை காதலி !

- ரியாஸ் 

தலைப்பு செய்தி :
கம்பன் வீட்டு கட்டு தறியும் கவிபாடும் என்பார்கள் ...உங்க பதிவுகள் படிப்பதால் என்னால்  இப்படி உளற முடியுது  ...நன்றி ..பொறுமையா படித்ததிற்கு ..ஹி ஹி இன்னும் பொறுமையா இருந்தால் ஒரு நாள் இல்ல ஒரு நாள் நல்ல கவிதை கிடைத்தாலும் கிடைக்கும் ஹி ஹி 

35 comments:

  1. காதல்(லி) பற்றியென்றால் கவிதை அருவியாய்க் கொட்டாதா?கொட்டியிருக்கிறது!

    ReplyDelete
  2. உண்மையிலேயே கற்பனை காதலிதானா?

    ReplyDelete
  3. அப்படி போடு , அடிச்சி தூள் பரத்துங்க..............சக்க போடு, போடு ராஜா..........................உங்க கவிதையிலவார்த்தைகளை விட கவிதையே நிறைய இருக்கு நண்பா கலக்குங்க............................

    ReplyDelete
  4. வித்தியாசமான அனுகுமுறை...

    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. ரஹீம் கஸாலி said...
    nice
    @@@@@@@@@@@
    tq tq

    ReplyDelete
  6. சென்னை பித்தன் said...
    காதல்(லி) பற்றியென்றால் கவிதை அருவியாய்க் கொட்டாதா?கொட்டியிருக்கிறது!
    @@@@@@@@@@
    ஹி ஹி நன்றி ஐயா

    ReplyDelete
  7. !* வேடந்தாங்கல் - கருன் *! said...
    வாழ்த்துக்கள்..
    @@@@@@@@@
    நன்றி

    ReplyDelete
  8. koodal bala said...
    உண்மையிலேயே கற்பனை காதலிதானா?
    @@@@@@@@
    எழுதும் போதே நினைத்தேன் இப்படி ஒரு கேள்வி வரும் என்று ...நன்றி நண்பா

    ReplyDelete
  9. .R.ராஜகோபாலன் said...
    அப்படி போடு , அடிச்சி தூள் பரத்துங்க..............சக்க போடு, போடு ராஜா..........................உங்க கவிதையிலவார்த்தைகளை விட கவிதையே நிறைய இருக்கு நண்பா கலக்குங்க............................
    @@@@@@@@@@
    நன்றி நன்றி நன்றி நண்பா

    ReplyDelete
  10. # கவிதை வீதி # சௌந்தர் said...
    வித்தியாசமான அனுகுமுறை...

    வாழ்த்துக்கள்..
    @@@@@
    நிஜமாவா ..
    ரொம்ப நன்றி

    ReplyDelete
  11. அருமையான கவிதையை கொடுத்துவிட்டு
    எங்களையெல்லாம் வெட்கப் படவைத்துவிட்டு
    இன்னும் நல்ல கவிதை கிடைக்கும் என
    ஏன் சொல்கிறீர்கள் எனப் புரியவில்லை
    முதல் பத்தியில் மட்டும் கடன்காரர்கள் என்பதற்குப் பதில்
    கோடீஸ்வரர்கள் என இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமோ
    சூப்பர் கவிதை தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. Ramani said...
    அருமையான கவிதையை கொடுத்துவிட்டு
    எங்களையெல்லாம் வெட்கப் படவைத்துவிட்டு
    இன்னும் நல்ல கவிதை கிடைக்கும் என
    ஏன் சொல்கிறீர்கள் எனப் புரியவில்லை
    முதல் பத்தியில் மட்டும் கடன்காரர்கள் என்பதற்குப் பதில்
    கோடீஸ்வரர்கள் என இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்குமோ
    சூப்பர் கவிதை தொடர வாழ்த்துக்கள்

    @@@@@@@@
    நன்றி சகோ ...நீங்க சொன்ன திருத்தம் நியாமானது..திருத்திவிட்டேன் நன்றி ...நம்பிக்கை அளித்த பாராட்டுக்களுக்கும் நன்றி மிக்க நன்றி

    ReplyDelete
  13. எப்படி சகோ இப்டிலாம்???

    சான்சே இல்ல...

    ஒவ்வொரு வார்த்தையிலும் கவிதை ஒளிஞ்சுருக்கு!!!

    ReplyDelete
  14. சூதுவாதற்ற கவிதைக்கு
    வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  15. ஆமினா said...
    எப்படி சகோ இப்டிலாம்???

    சான்சே இல்ல...

    ஒவ்வொரு வார்த்தையிலும் கவிதை ஒளிஞ்சுருக்கு!!!
    @@@@@@@@@@@
    நன்றி சகோ ...நானும் திருப்பி திருப்பி படித்து பார்த்தேன் ...எனக்கு அப்படி ஒன்னும் தெரியலை ...உங்க அன்பு தான் தெரியுது நன்றி சகோ

    ReplyDelete
  16. இராஜராஜேஸ்வரி said...
    சூதுவாதற்ற கவிதைக்கு
    வாழ்த்துக்கள்..
    @@@@
    நன்றி சகோ .

    ReplyDelete
  17. ஏன் இதுவே நல்ல கவிதை நண்பரே

    அருமையான வரிகள் .

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  18. இன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டை பற்றி நகைச்சுவை .

    வாருங்கள் ,வந்து கருத்தை கூறுங்கள்

    ReplyDelete
  19. M.R said...
    ஏன் இதுவே நல்ல கவிதை நண்பரே

    அருமையான வரிகள் .

    பகிர்வுக்கு நன்றி

    @@@@@@
    நன்றி சகோ

    ReplyDelete
  20. M.R said...
    இன்று எனது பதிவில் ப்ளாக் பதிவு திருட்டை பற்றி நகைச்சுவை .

    வாருங்கள் ,வந்து கருத்தை கூறுங்கள்
    @@@@@@@
    படித்தேன் ரசித்தேன் நன்றி சகோ

    ReplyDelete
  21. உன்னால் ஊரே மிதனா தட்ப வெப்பத்தில் குளிர் கடியுதடி
    ரசிக்க தகுந்த வரிகள்

    ReplyDelete
  22. அட நல்லாத்தான் இருக்குங்க..

    ReplyDelete
  23. சூது வாது இல்லாமல் -நீ
    சாலையில் போகையில்
    உன் பார்வை யாரை கடந்தது என்று
    சூதாட்டமே நடக்குதடி //

    ஆகா...எப்படியெல்லாம் வர்ணிக்கிறீங்க,

    காதல் அருவியில் எம்மை நனைத்து விட்டு, இது கவிதை இல்லை என்று சொன்னால் எப்படிச் சகோ;-))

    ReplyDelete
  24. அட்டகாசம் ஜி

    அதிலும் //மழைக்கும் உன் மீது காதல்
    வெயிலுக்கும் உன் மீது காதல்
    உன்னால் உன் ஊரே இதமான
    தட்ப வெப்பத்தில் குளிர்காயுதடி!

    வெயிட்டு

    ReplyDelete
  25. குணசேகரன்... said...
    அட நல்லாத்தான் இருக்குங்க..

    @@@@
    நன்றி நண்பா

    ReplyDelete
  26. கிராமத்து காக்கை said...
    உன்னால் ஊரே மிதனா தட்ப வெப்பத்தில் குளிர் கடியுதடி
    ரசிக்க தகுந்த வரிகள்
    @@@@@@

    நன்றி நண்பா

    ReplyDelete
  27. நிரூபன் said...
    சூது வாது இல்லாமல் -நீ
    சாலையில் போகையில்
    உன் பார்வை யாரை கடந்தது என்று
    சூதாட்டமே நடக்குதடி //

    ஆகா...எப்படியெல்லாம் வர்ணிக்கிறீங்க,

    காதல் அருவியில் எம்மை நனைத்து விட்டு, இது கவிதை இல்லை என்று சொன்னால் எப்படிச் சகோ;-))
    @@@@

    நன்றி நண்பா

    ReplyDelete
  28. தேவைகளற்றவனின் அடிமை said...
    அட்டகாசம் ஜி

    அதிலும் //மழைக்கும் உன் மீது காதல்
    வெயிலுக்கும் உன் மீது காதல்
    உன்னால் உன் ஊரே இதமான
    தட்ப வெப்பத்தில் குளிர்காயுதடி!

    வெயிட்டு
    @@@
    நன்றி நண்பா

    ReplyDelete
  29. உங்கள் கற்பனை நிஜமாகியதா??

    ReplyDelete
  30. அழகான அருமையான காதலின் வரிகள் அது சரி அது என்ன தலைப்பு செய்தி வேறு ?

    ReplyDelete
  31. அன்பின் ரியாஸ் - கற்பனைக் காதலியுடன் கற்பனைகளையும் சேர்த்து - வாசலில் விட்டு விட்டு - கண்ணாடியில் புதிதாய்த் தோன்றிய பருவினைப் பார்த்து மகிழ்வது நன்று. கவிதை அருமை - சிந்தனை அருமை - நல்வாழ்த்துகள் ரியாஸ் - நட்புடன் சீனா

    ReplyDelete
  32. //இத்துன்னை பெருமைகளையும்
    வாசலில் செருப்போடு கழட்டி வைத்துவிட்டு
    கண்ணாடியில் அன்று புதிதாய்
    திருஷ்டியாய் அரும்பியுள்ள பருவை பார்த்து
    வேதனையில் என் கற்பனை காதலி !//

    அடப்பாவமே, எல்லாம் கற்பனை தானா? ;)))))

    பாராட்டுக்கள், வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள்.

    ReplyDelete
  33. வணக்கம்
    ரியாஸ் அஹமது (அண்ணா)

    அருமையான கவிதை வரிகள் ஒவ்வொன்றும் பல அர்தங்களை உணரவைக்க வைத்தவிட்டது பாரட்டுக்கள் அண்ணா
    அருமையான வரிகள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete